11 டிசம்பர், 2010

படைகளுக்கிடையில் முறண்பாடுகளைத் தோற்றுவிக்க முயற்சி :




முறண்பாடுகளைத் தோற்றுவிக்க முயற்சி : ஜனாதிபதி
நாட்டின் தற்போதைய பிரச்சினைகளையும், அதற்கான அரசியல் தீர்வுகளையும் வெளிப்படுத்தும் நோக்கிலேயே லண்டனுக்குச் சென்றேன். இருப்பினும், அதனை விரும்பாத சக்திகளே எதிர்ப்பினை வெளிப்படுத்தின. இன்னும் சிலர் படைகளுக்கு இடையில் சந்தேகத்தை ஏற்படுத்தி, முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதற்கு முயற்சிக்கின்றனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.

ஒக்ஸ்போர்ட் யூனியன் உரை ரத்துச்செய்யப்பட்டதை அடுத்து, அதனை சாதகமாக்கிக் கொண்ட சிலர், யுத்தக் குற்றம் இடம்பெற்றதாக சாதிக்கவும் நினைக்கின்றனர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டேன். சிலர் இனவாதத்தைத் தூண்டுவதற்கு முயற்சிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவுசெலவுத் திட்டம் மீதான இறுதி நாள் விவாதத்தில் கலந்துகொண்டு பதிலளித்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

யுத்தத்தின் பின்னர் 2010 ஆண்டு அமைதி, சமாதானம் நிறைந்த ஆண்டாகத் திகழ்கின்றது. இந்த நிலையிலும் வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்கென அதிக நிதி ஒதுக்கப்படடிருப்பதாக இங்கு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. நாட்டை மீட்பதற்காக மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்ட எமது படையினருக்கான ஊதியம் மற்றும் நிவாரணத் தேவைகளுக்காக, பாதுகாப்பு அமைச்சுக்கான நிதியின் 80 வீதம் செலவிடப்படவிருக்கின்றது.

எனவே, இது அதிகமான தொகை அல்ல. எமது படையினர் இங்கு மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு மூன்று இலட்சம் மக்களை மீட்டனரே தவிர, அவர்கள் எந்தவொரு யுத்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை.

ஆனாலும், அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாட்டுப் பயங்கரவாதிகளை போஷிக்கும் வகையில் சில சக்திகள் சூழ்ச்சிகரமான செயற்பாடுகளில் இறங்கியுள்ளன. இதற்கு இடமளிக்கக் கூடாது" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக