11 டிசம்பர், 2010

த.தே.கூட்டமைப்பு - தமிழ்க் கட்சிகளின் அரங்கம் சந்திப்பு

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு கூட்டமைப்பின் கொழும்பு அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பு இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்க் கட்சிகள் இணைந்து இனப்பிரச்சினை தீர்வில் ஒருமித்த குரல்கொடுப்பது மற்றும் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது குறித்த விடயங்கள் இன்றைய தினம் கலந்துரையாடப்படவுள்ளதாக சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக