5 டிசம்பர், 2010

லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு அஸ்வர் சபையில் பாராட்டு

லேக் ஹவுஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக எதிர்க்கட்சியினர் விமர்சிப்பதில் எவ்விதமான உண்மையும் இல்லை. மாறாக அந்நிறுவனம் அதன் தலைவர் பந்துல பத்மகுமார தலைமையில் இலாபமீட்டும் நிறுவனமாக இயங்குகிறது. கடந்த வருடம் மட்டும் மூன்று மில்லியன் ரூபாவை இலாபமாக இந்நிறுவனம் பெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் சபையில் உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார். சீலரட்ண செனரத், மஹிந்த அபேசிங்க, தில்லைநாதன், செந்தில்வேலவர் போன்ற திறமையா னவர்களால் அந்நிறுவனம் புத்தெழுச்சி பெற்றுவருகிறது. பத்திரிகைகளின் தரம், விற்பனை என்பன உயர்வடைந்துள்ளது.

எனவே லேக் ஹவுஸ் நிறுவனம் தொடர்பாக குற்றம் சாட்டவோ அல்லது விமர்சனம் செய்யவோ எதிர்க்கட்சியினருக்கு அருகதை கிடையாது என்றும் அஸ்வர் எம்.பி. தனதுரையில் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக