5 டிசம்பர், 2010

சீனாவில் கு‌ண்டு வெடி‌ப்பு : 6 பேர் பலி, 40 பேர் காயம்



தென்மேற்கு சீனாவின் குய்ஸு பகுதியில் உள்ள இணையத்தள மையத்தில் நிகழ்ந்த கு‌‌ண்டு வெடி‌ப்‌பி‌ல் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 40 பேர் காயமுற்றுள்ளனர்.

குய்ஸு மாகாணத்தின் கைலி நகரத்தில் உள்ள இணையத்தள மையத்தி‌‌ல் சீன நேரப்படி நேற்று இரவு சுமார் 10.30 மணிக்கு இந்த கு‌ண்டு வெடி‌ப்பு நிகழ்ந்துள்ளதாக அம்மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெடி விபத்தில் இணையத்தள மையம் முற்றிலும் சேதமடைந்திருப்பதாகவும், 6 பே‌ர் உ‌யி‌ரிழ‌ந்‌திரு‌ப்பதாகவு‌ம், 40 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார், 11 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

வெடி விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக