5 டிசம்பர், 2010

வன்னியில் பெருமழை; 25ஆயிரம் மக்கள் வெள்ளத்தினால் பாதிப்பு

வன்னிப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பெருமழையினால் 25000 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். மீள்குடியேறிய மக்களின் வீடுகள் முழுமையாக சீரமைக்கப்படாத நிலையில் தறப்பாள் கூடாரங்களிலும் தற்காலிக வீடுகளிலும் த்ஙகியிருந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மீண்டும் இவர்கள் அகதிகளாகியுள்ளனர்.

கடந்த ஐந்து நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் பெருமழையினால் குளங்கள் அனைத்தும் நிரம்பி வான் பாய்கின்றன. இதனால் தாழ்ந்த பகுதிகளில் இருக்கும் மக்கள் வெள்ள அபாயத்துக்குள்ளாகியிருக்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் முரசுமோட்டை, மருதநகர், கல்மடு, மணியங்குளம், பாரதிபுரம் கிழக்கு, பொன்னகர், திருநகர் வடக்கு, புளியம் பொக்கணை, தருமபுரம் கிழக்கு, உழவனூர் மற்றும் பூநகரிப் பிரதேச செயலர் பிரிவிலுள்ள பெரும்பகுதியும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைச்சிக்குடியிருப்பு, செல்வபுரம், மண வாளன்பட்டமுறிப்பு, கரும்புள்ளியான், பாண் டியன்குளம் மேற்கு, சிலாவத்தை போன்ற இடங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக் கின்றன. இதேபோல வவுனியா மாவட்டத் திலும் மன்னார் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி களிலும் மக்கள் வெள்ளப்பாதிப்புக்குட்பட் டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி களை அனர்த்த முகாமைத்துவப்பிரிவினர் மேற் கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக