13 நவம்பர், 2010

யுத்த பாதிப்பு : காணிகளை இழந்தோருக்கு உறுதிப் பத்திரம்

வடக்கு கிழக்கில் சொந்த நிலங்களில் வாழ்ந்த மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன என காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'வடக்கு கிழக்கில் வாழ்ந்த மக்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 'பிம் சவியஞூ' நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் மேற்படி காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

யுத்தத்தின் போது தமது காணி உறுதிப் பத்திரத்தை இழந்தவர்களுக்கு இதன் மூலம் பலன் கிட்டச் செய்வதே இந்நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும்.

பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் மற்றும் நில அளவைத் திணைக்களங்களில் அப்பிரதேசங்களில் வாழ்ந்ததற்கான பதிவுகள் உள்ளன. 'பிம் சவிய' நிகழ்ச்சித் திட்டம் வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைதீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இடம்பெறும்" என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக