13 நவம்பர், 2010

ஜனாதிபதியின் பதவியேற்பு தினத்தன்று கொழும்பு 1-4 வரையான பகுதியில் தனியார் ஊழியர்களுக்கு விடுமுறை



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு வைபவம் இடம்பெறவுள்ள எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பு 01 முதல் கொழும்பு 04 வரையிலான பகுதிகளில் அமைந்துள்ள தனியார் நிறுவனங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குமாறு தொழில் உறவுகள் உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சர் காமினிலொக்குகே கோரிக்கை விடுத்துள்ளார்.

அன்றைய தினம் இப்பகுதிகளிலுள்ள அரசாங்க பாடசாலைகள் அலுவலகங்கள் மூடப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜனாதிபதியின் பதவியேற்பு ஆரம்ப வைபவம் 2010, நவம்பர் 19 ஆம் திகதி ஜனாதிபதி செயலக வளாகத்தில் இடம்பெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்றைய தினத்தில் கொழும்பு 01, கொழும்பு 02, கொழும்பு 03, கொழும்பு 04 இல் அமைந்துள்ள அனைத்து அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் பதவியேற்பு ஆரம்ப வைபவம் தேசிய அலுவலக நிகழ்வாக இருப்பதனாலும், இன்றைய நாளில் ஏற்படக்கூடிய போக்குவரத்துத் தடங்கலைக் கருத்தில் கொண்டும் மேலுள்ள பிரதேசங்களில் அமைந்துள்ள தனியார் துறை தாபனங்களின் பணியாளர்களுக்கு 2010, நவம்பர் 19 ஆம் திகதியன்று கொடுப்பனவுடன் கூடிய லீவினை வழங்குமாறு உரிய தொழில் தருநர்களை தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக