13 நவம்பர், 2010

வெலிகந்தையில் புனர்வாழ்வு பெற்ற 58 பேர் பெற்றோரிடம் ஒப்படைப்பு

புனர்வாழ்வளிக்கப்பட்ட 58 முன்னாள் புலி உறுப்பினர்கள் நேற்று முன்தினம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சு கூறியது,

இது தொடர்பான வைபவம் அமைச்சர் டியூ. குணசேகரவின் தலைமையில் வெலிகந்தையில் நடைபெற்றது. இதன் போது தொழிற்பயிற்சி பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதுவரை 5300 முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குணசேகர இங்கு தெரிவித்தார். ஏனையவர்கள் படிப்படியாக விடுவிக்கப்படுவர் எனவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக