1 நவம்பர், 2010

கண்டியில் ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு

கண்டியில் இயங்கும் இரத்தின தீபம் அமைப்பு 15 ஊடக வியலாளர்களுக்கு ஊடக மாமதி, ஊடகத் தாரகை, நிழற்படவேந்தன், காட்சி ஊடகச் செம்மல் போன்ற கௌரவ விருதுகளை வழங்கி கௌரவித்தது.

பாராளுமன்ற அங்கத்தவர் வீ.இராதா கிருஷ்ணன் பிரதம அதிதியாகக் கலந்து இவ்வீருதை வழங்கி வைத்தார்.

வருடா வருடம் இரத்தின தீபம் அமைப்பு பல்வேறு கலைஞர்களையும் ஊடக வியலாளர்களையும் ரத்ன தீபம் விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம் . இம்முறை ஊடகம் சார்ந்தவர்களுக்கு இவ்வாறு ஊடக மதி, ஊடகத்தாரகை, காட்சி ஊடகச் செம்மல் முதலான விருதுகளை வழங்கியது.

அவ்வாறு விருது வழங்கப் பட்ட ஊடக வியலாளர்கள் பின்வருமாறு-

ஏன்எம்.ராஜா, ஸ்டார் ராஸீக், எம்.எல்.எம்.லாபிர், அலியார் இக்பால், மொகமட் இர்பான், எஸ்.முகுந்தன், எஸ்.ராமானுஜம். ஜே.எம்.ஹாபீஸ், மர்லின் மரிக்கார், எஸ்.கே.சமரநாயக, ஜே.ஏ.எல்.ஜயசிங்க, காமினி ராமநாயக்க, காமினி சந்திரசேகர ஆகியோர்களாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக