12 நவம்பர், 2010

வடக்கிலுள்ள 9 நீதிமன்றங்களை புனரமைக்க ரூ. 890 மில்லியன்







ஆசிய அபிவிருத்தி வங்கியின் 890 மில்லியன் ரூபா கடனுதவியுடன் வடக்கிலுள்ள ஒன்பது நீதிமன்றங்களை மீளமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியது. இதன்படி, பருத்தித்துறை, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, வேலணை, மாங்குளம், சாவகச்சேரி, மல்லாகம் மற்றும் ஊர்காவற்துறை நீதிமன்றங்களுக்கு புதிதாக கட்டடங்கள் அமைக்கவும் புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ‘கெயா’ திட்டத்தின் கீழ் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட உள்ளதோடு அதன் ஒரு பகுதியாகவே இந்த கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊர்காவற்துறையில் 150 மில்லியன் ரூபா செலவில் நீதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலமும் நிர்மாணிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக