12 நவம்பர், 2010

32 தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது




ஒருகோடி எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான 32 தங்க பிஸ்கட்டுகளை சிங்கப்பூரிற்கு சட்ட விரோதமாக கடத்த முயன்ற இலங்கையர் ஒருவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் நேற்று (11) அதிகாலை கைது செய்துள்ளனர்.

சுங்க அதிகாரிகளும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து இந்த நடவடிக்கையினை மேற்கொண்டதாக, சுங்க அத்தியட்சகர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்தார்.

சந்தேகத்திற்கிடமான விமானப் பயணியின் உள்ளாடையினுள் மறைத்து வைத்திருந்த 11 பிஸ்கட்கள் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

விமான நிலையத்தில் பயணிகளின் பொதிகளை பரீட்சிக்கும் இயந்திரங்களில் சிக்காதவாறு கறுப்புப் பொலித்தீன் இட்டு பொதி செய்யப்பட்டிருந்ததாகவும், மொத்த பிஸ்கட்களின் பாரம் மூன்று கிலோ கிராமைவிடவும் கூடுதலாக உள்ளதாக சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுங்க அத்தியட்சகர்களான நரேந்து பெர்னாண்டோ பராக்கிரம பஸ்நாயக்க ஆகியோரது பணிப்பின்பேரில் உதவி சுங்க அத்தியட்சகர்களான ஏ. சாந்த, டீ. எம். ரீ. பீ. திஸாநாயக்க, யூ.மகீன், ஏ. ரம்சி, ஜகத் குணதிலக்க மற்றும் உதவி சுங்க அத்தியட்சகர் திலினி பெரேரா ஆகியோர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக