12 நவம்பர், 2010

எழுத்துமூல ஆவணங்களை டிசம்பர் 31 வரை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவுள்ளது

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு சாட்சியங்கள் தொடர்பான எழுத்துமூல ஆவணங்களை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த எழுத்துமூல சாட்சியங்கள் தனிப்பட்ட நபர்களிடமிருந்தும் நிறுவனங்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

யுத்தம் இடம்பெற்ற போது நாட்டை விட்டு வெளியேறியவர்களிடமும் சாட்சியங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஆணைக்குழுவின் அமர்வுகளை 6 மாதங்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் நீடிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் அமர்வுகள் அடுத்த வருடம் மே மாதம் 16 வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் அமர்வுகள் இம்மாதம் 15ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னர் மட்டக்களப்பு, கிளிநொச்சி, முல்லைதீவு மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் திருகோணமலை, அம்பாறை, அனுராதபுரம் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களிலும் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக