16 அக்டோபர், 2010

2018: பொதுநலவாய போட்டிகள்;



இப்போதிருந்தே தயாராகுமாறு விளையாட்டு வீரர்களுக்கு ஜனாதிபதி பணிப்பு
2018 ஆம் ஆண்டு இலங் கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள சகல விளையாட்டு வீரர்களும் இப்போதிருந்தே ஆயத்த மாகுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய விளை யாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுக்காக புதுடில்லி சென்ற ஜனாதிபதி இலங்கை வீரர்களை சந்தித்து உரையாடியதுடன், அவர்களுக்கு தனது இதயபூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

குத்துச் சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மஞ்சு வன்னியாராச்சிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இலங்கையில் வீரர்களுக்கு பயிற்சி பெறுவதற்கு தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கை பயன்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி பெற போதுமான இட வசதிகள் இல்லை என இலங்கை வீரர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொதுநலவாய போட்டிகள் நடைபெறும் இடத்துக்கு ஜனாதிபதி வருகை தந்தமை தம்மை மேலும் வலுவூட்டுவதாகவும் சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடு இன்றி அனைவரோடும் அன்பாக பழகும் ஒரு ஜனாதிபதி எமக்கு கிடைத்துள்ளார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் ஜனாதிபதியின் தனிப்பட்ட வைத்தியரான ஈலியந்த வயிட் என்பவரூடாக சிகிச்சை பெறுவதற்கு வசதி செய்துதருமாறும் விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி இது தொடர்பாக நடவடிகை எடுக்குமாறு செயல ருக்கு பணிப்புரை விடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக