12 செப்டம்பர், 2010

இலட்சக்கணக்கான ஆதரவாளரை இழக்கும் நிலையில் ஐ. தே. க ரணிலின் எதிர்க் கட்சி ஆசனமும் பறிபோகலாம்




ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டி ருக்கின்ற உட்பூசல் மேலும் உக்கிரமடைந்திருக்கின்ற நிலையில் கட்சியின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மேலும் சிக்கல்களை எதிர்நோக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

ஐ. தே. கவின் 25 எம்.பிக்கள் பாராளு மன்றத்திற்குள் தனியாகச் (சுதந்திரமாக) செயற்படுவதற்குத் தீர்மானித்துள்ளனர். ஐ. தே. கவினுள் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தலைமை ஒரு வாரத்தினுள் தீர்வுகாண வேண்டுமென 25 எம். பிக்களும் கால அவகாசம் வழங்கியுள்ளனர். இந்த நிலையை ரணில் விக்கிரமசிங்கவால் சமாளிக்க முடியாமல் போனால் கட்சி சின்னாபின்னமாகப் போவதைத் தடுக்க முடியாது என கட்சி முக்கியஸ்தர்கள் தலைமைக்குச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ரணில் இதனைப் பொருட்படுத்தாமல் இருப்பது ஐ. தே. கவின் ஆதரவாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது-

இதனால் ஐ. தே. கவின் இலட்சக் கணக்கான ஆதரவாளர்கள் கட்சியைவிட்டு ஒதுங்கும் நிலை உருவாகியிருக்கிறது என ஐ. தே. கவின் இரத்தினபுரி மாவட்ட எம்.பியும், மாவட்ட அமைப்பாளருமான திருமதி தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

ஐ. தே. க இன்று சின்னாபின்னமாகிக் கிடப்பதற்கு தலைமையின் போக்கே காரணமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

25 எம்.பிக்கள் சுதந்திரமாக செயற் படுவதற்கு எடுத்துள்ள முடிவு ரணில் விக்கிரமசிங்வை எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்குவ தற்கான ஒரு நகர்வாகவே இருக்கி றதென அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐ. தே. க. பாராளுமன்றத்தில் தனது ஆசனங்களை இழக்கும் நிலை ஏற்பட்டால் எதிர்க் கட்சி தலைவர் ஆசனத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பிருக்கிறதென்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக