12 செப்டம்பர், 2010

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு மாற்றம் ஜனநாயகக் கொள்கையை பாதிக்கும்-அமெரிக்கா

இலங்கையில் அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளரான பி.ஜே. குரோவ்லி இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் :

""நல்ல அரசாங்கத்தின் கொள்கைகளையும் ஜனநாயகத்தையும் மற்றும் சுயாதீன அரச நிறுவகங்களையும் விருத்தி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா கோரிக்கை விடுக்கிறது.

சுயாதீன நிறுவகங்களுக்கு தகுதி வாய்ந்த பொருத்தமான அதிகாரிகளை நியமித்தல், அதிகாரப் பகிர்வை அதிகப்படுத்துதல், பேச்சுவார்த்தை மற்றும் தேசிய நல்லிணக்கத்தை விருத்தி செய்தல் உட்பட ஜனநாயகத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுக்கும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது என பி.ஜே. குரோவ்லி மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக