12 செப்டம்பர், 2010

நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எண் 8

இலங்கையின் அரசியல் வெற்றியுடன் சோதிட ரீதியாகவும் எண் சோதிடத்தின்படி எட்டாம் இலக்கத்திற்கும் விசேடமான தொடர்புகள் இருப்பதாக முன்னணி சோதிடர் சுமணதாச அபேகுணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜாதகத்தின்படி இலங்கை கும்ப ராசியில் அமைந்துள்ளமை எட்டாம் இலக்கத்தை அடிப்படையாகக் கொண்ட நிகழ்வுகள் பெரும் பாக்கியங்களுக்கு வழி வகுக்குமென்றும் அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி இலக்கமாகுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் பதினெட்டாவது திருத்தத்திற்குப் பாராளுமன்றத்தில் எட்டாந் திகதியே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆதரவாகக் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை 161. எதிராக 17. இரண்டினதும் கூட்டுத்தொகையும் எட்டு! ஆதரவாகவோ, எதிராகவோ அளிக்கப்படும் வாக்குகளை முன்கூட்டியே தயார்செய்துகொள்ள முடியாது. எனவே இதில் சோதிடமும் எண் சோதிட விஞ்ஞானமும் புதுமையான தொடர்புகளை கொண்டிருப்பது தெளிவாகப் புலனாகிறதென்றும் சோதிடர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக