7 ஆகஸ்ட், 2010

நிலத்திலும் நீரிலும் பறக்கும் விமானம் சீனா தயாரிப்பு


சீனாவின் ஹைபே மாகாணத்தில் உள்ள ஷிஜியாகுவாங் விமான கம்பெனி ஒன்று நீரிலும் நிலத்திலும் பயணம் செய்யத்தக்க செகுல் 300 என்ற பெயருடைய விமானத்தை தயாரித்துள்ளது.இந்த விமானத்தை வடிவமைத்துள்ள ஷியாங்ஷியாங்பெங் கூறும் போது உள்நாட்டிலேயே(சீனாவின்) தயாரிக்கப்பட்ட நீரிலும் ,நிலத்திலும் இறங்கி பறக்க கூடிய உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் இதுவாகும் என்றார். நான்கு பேர் அமரக்கூடிய விமானத்தின் விலை 4 மில்லியன் யுவான் ஆகும். விமான நிறுவனத்தின் துணை தலைவர் கூறுகையில் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள விமானத்தை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். வரும் நவம்பர் மாதம் சீனாவின் தெற்குபகுதியில் உள்ள குங்டாங் மாகாணத்தில் நடைபெற உள்ள விமான கண்காட்சியில இடம் பெற செய்யப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக