7 ஆகஸ்ட், 2010

கே.பி. யின் கைது புலிகளின் சர்வதேச வலையமைப்பிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது- அமெரிக்கா

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டமையினால் புலிகளின் சர்வதேச வலையமைப்பு பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வியடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக புலம் பெயர் தமிழர்களிடம் பணம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வதியும் புலம்பெயர் தமிழர்களிடம் புலிகள் பணம் திரட்டி வருவதாக ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

தமிழ் அறக்கட்டளைகளின் ஊடாகவும் புலிகள் பணம் திரட்டி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக