7 ஆகஸ்ட், 2010

வவுனியா பஸ் விபத்தில் 15 இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில்

ஏ-9 வீதியின் வவுனியா - ஈரபெரியான்குளம் சோதனைச் சாவடிக்கு அருகில் இராணுவ பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 15 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்றைய தினம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அநுராதபுரம் நோக்கி பயணித்த குறித்த பஸ் ஈரபெரியான்குளம் சோதனைச் சாவடிக்கு அருகில் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாய் உள்ளதாகவும் வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்த விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக