25 ஆகஸ்ட், 2010

மாந்தை தொழிற்பயிற்சி நிலையத்தில் திங்கள் முதல் கற்கை நெறிகள் ஆரம்பம் கிளிநொச்சியில் நேர்முகப் பரீட்சை பூர்த்தி


வன்னிப் பிரதேசத்தில் மீளக் குடியமர்ந்துள்ள இளைஞர், யுவதிகளுக்குத் தொழிற் பயிற்சி அளிக்கவென பத்து தொழில் பயிற்சி நிலையங்களை அமைக்கும் திட்டத்தின் கீழ் மாந்தை கிழக்கு தொழிற் பயிற்சி நிலையத்தில் எதிர்வரும் 30ம் திகதி தொழிற் பயிற்சி கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் வன்னிப் பிரதேச பணிப்பாளர் ரீ. வினோதராஜ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் :-

பத்து தொழிற்பயிற்சி நிலையங்களினதும் நிர்மாணப் பணிகளை இம்மாதமே பூர்த்தி செய்வதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்ப ட்டிருந்தது. இருப்பினும் மாந்தை கிழக்கில் அமைக்கப்பட்டுளள் தொழிற் பயிற்சி நிலையத்தின் அமைப்புப் பணிகள் பூர்த்தி அடைந்துள்ளன. அதனால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தொழிற் பயிற்சி கற்கை நெறிகளை ஆரம்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம்.

இப்பயிற்சி நிலையத்தில் அலுமினிய இணைப்பு மற்றும் இலத்திரனியல் வயரிங்க ஆகிய கற்கை நெறிகள் முதலில் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன. ஒரு கற்கை நெறிக்கு முப்பது பேர் என்ற அடிப்படையில் இளைஞர், யுவதிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்படுகின்ற மூன்று தொழிற் பயிற்சி நிலையங்களிலும் ஆரம்பிக்கப்படவிருக்கின்ற கற்கை நெறிகளுக்கு சேர்த்துக் கொள்ளப்படும் இளைஞர், யுவதிகளுக்கு நேர்முகப் பரீட்சைகள் நிறைவுற்றுள்ளன. மன்னார் மற்றும் வவுனியாவில் அமைக்கப்படும் நிலையங்களுக்குச் சேர்த்துக் கொள்ளப்படும் இளைஞர், யுவதிகளுக்கு தற்போது நேர்முகப் பரீட்சைகள் நடைபெறுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள நிலையங்களதும் நிர்மாணப் பணிகளை செப்டெம்பர் மாதம் 30ம் திகதிக்குள் பூர்த்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக