25 ஆகஸ்ட், 2010

மட்டு மாநகர சபை உறுப்பினர் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி முறைப்பாடு



தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினரும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான கில்லி என்றழைக்கப்படும் பிரகாசம் சகாயமணி நேற்று முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி சகாயமணி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தமது மாநகர சபை உறுப்பினர் காணாமல் போயுள்ளமை குறித்து மாநகர சபை மேயரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், கிழக்குமாகாண முதலமைச்சர் சி;சந்திரகாந்தனின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளார்

காளிகோயில் வீதி புன்னைச்சோலையைச் சேர்ந்த சகாயமணி நேற்று திங்கட்கிழமை மாலை 6.15 மணியளவில் மாநகர மேயர் சிவகீதா பிரபாகரனை அவரது வீட்டில் சந்தித்துவிட்டு ஆசீர்வாதம் என்ற மாநகர உறுப்பினரைச் சந்தித்து உரையாடியிருக்கிறார் பின்னர் அங்கிருந்து இரவு 7 மணிக்கு தனது வீடு நோக்கிப் புறப்பட்ட இவர் இன்னமும் வீடு சென்று சேரவில்லை என தெரியவருகிறது.

இவர் காணாமல் போயுள்ளமை காரணமாக மாநகர சபை உறுப்பினர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. காணாமல் போயுள்ளமை குறித்து மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக