25 ஆகஸ்ட், 2010

இலவச பாட நூல் விநியோகம் இன்று ஹோமாகம புதிய களஞ்சியசாலையில் வைபவம்


2011ம் கல்வியாண்டுக்குரிய அரசாங்கப் பாடசாலைகளுக்கான இலவச பாடநூல் விநியோகம் ஹோமாகமையில் இன்று ஆரம்பமாகுமென கல்வியமைச்சின் செயலாளர் சுனில் சிறிசேன தெரிவித்தார்.

இலவச பாடநூல்களுக்காக அரசாங்கம் 2700 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் சகல அரச பாடசாலைகள், பிரிவேனாக்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்காக 25 மில்லியன் பாட நூல்கள் அச்சிடப்பட்டு வருவதுடன் இவை 364 வகையான பாடநூல்களாகு மெனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கல்வி வெளியீட்டுத் திணைக்களப் பணிப்பாளரும் பிரதி பரீட்சைகள் ஆணையாளருமான புஷ்பகுமார தெரிவிக்கையில் :-

கல்வி வெளியீட்டுத் திணைக்களமானது இம்முறை இலவச பாடநூல்களைக் களஞ்சியப்படுத்துவதற்காக ஹோமாகமயில் புதிய நூல் களஞ்சியசாலையொன்றை நிர்மாணித்துள்ளது. பாடநூல்கள் அச்சிடப்படும் வேளையிலேயே பாடநூல்கள் விநியோகப் பணிகளும் ஆரம்பமாகியுள்ளது.

கல்வியமைச்சானது சலுசல நிறுவனத்தி ற்குச் சொந்தமான களஞ்சிய சாலையிலேயே பாடநூல்களைக் களஞ்சியப்படுத்தி வந்துள்ளது. இம்முறை இரண்டரைக் கோடி ரூபா செலவில் ஹோமாகமையில் புதிதாக நிர்மாணிக்கப்ப ட்டுள்ள களஞ்சிய சாலையில் பாடநூல்கள் களஞ்சியப்படுத்தப்பட்டு அங்கிருந்து விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவுள்ளன.

இக்களஞ்சியசாலை முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட பின்னர் களஞ்சிய சாலைகளுக்காக செலவிடப்படும் பல இலட்ச ரூபாய்களை மீதப்படுத்த முடியும் என கல்வியமைச்சு தெரிவிக்கின்றது.

இன்று 25ம் திகதி ஆரம்பமாகும் பாடநூல் விநியோக நடவடிக்கைகள் டிசம்பர் 12ம் திகதியுடன் நிறைவுறும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக