25 ஆகஸ்ட், 2010

மகாவலி கங்கையில் நீராடிய மூவரை காணவில்லை

மகாவலி கங்கையில் நீராடிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காணாமற் போயுள்ளனர்.

இவர்கள் மூவரும் நீரில் அடித்துச் செல்லப் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.

தாய், மகன், மகள் ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். பேராதனைப் பொலிஸ் பிரிவில் உள்ள கொஹா கொடை என்ற இடத்தில் இவர்கள் நீராடும் போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவர்கள் கொழும்பு கொட்டஹேன பகுதியைச் சேர்ந்தவர்களாகும்.

இவர்களைத் தேடும் பணி ஆரம்பமாகியுள்ளது. ஆற்றில் அதிக நீர் ஓடுவதனால் தேடும் பணிகள் சற்று தாமத மாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக