3 ஆகஸ்ட், 2010

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு ஜனாதிபதி உதவி



வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு இலங்கை ஜனாதிபதி தமது அனுதாபங்களை தொலைபேசி மூலம் பாகிஸ்தான் அதிபருடன் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இலங்கையிலிருந்து வைத்தியர் குழு ஒன்றையும் மருந்துப் பொருட்களையும் அனுப்பத் தயாராவதாக அரச செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் ஒரு தொகுதி தேயிலையும் அனுப்பிவைக்கப் படவுள்ளதாக மேலும் தெரிய வருகிறது. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தொலைபேசி மூலம் பாகிஸ்தான் தலைவர் யூசுப்ராசா கிலானியுடன் தொடர்புகொண்டதாகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக