3 ஆகஸ்ட், 2010

அரச அதிகாரியை மரத்தில் கட்டிய மேர்வின் சில்வா

களனி பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை அமைச்சர் மேர்வின் சில்வா மரத்தில் கட்டியுள்ளார்.

களனி பிரதேசத்தில் பரவி வரும் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அவர் கலந்து கொள்ள தவறியமையினாலேயே அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்லதாகத் தெரிவிக்கப்படுகிறது.

களனி பிரதேசத்தில் பரவி வரும் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்துவதான முயற்சிகளை மேற்கொள்ளத் தவறிய அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் போவதாக நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக