3 ஆகஸ்ட், 2010

டெங்கு ஒழிப்பு தேசிய திட்டம்: நாடெங்கிலும் நேற்று ஆரம்பம்


தேசிய டெங்கு ஒழிப்பு தின வேலைத் திட்டம் நேற்று 2ம் திகதி நாடெங்கிலும் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு பணிப்பாளர் டாக்டர் நிமல்கா பன்னிலகெட்டி தெரிவித்தார்.

இவ்வேலைத் திட்டத்திற்கு நாடெங்கிலும் பொது மக்களின் ஒத்துழைப்பு பெரிதும் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வேலைத் திட்டம் அரசாங்க மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் பங்களிப்புடன் செயற்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். அரசாங்கம் இம் மாதத்தின் நான்கு தினங்களை தேசிய டெங்கு ஒழிப்பு தினங்களாகப் பிரகடனப் படுத்தியுள்ளது. இதன் முதலாவது நாள் வேலைத் திட்டம் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதேநேரம் டெங்கு, நுளம்பு பெருக்கத்தை ஒழித்துக் கட்டும் நோக்கிலான இவ்வேலைத் திட்டம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலும் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டன. இதன் நிமித்தம் மேற்கொள்ளப்பட்ட சிரமதானப் பணிகளில் முப்படையினரும் பொலிஸாரும் சிவில் பாதுகாப்பு அதிகா ரிகளும் மாத்திரமல்லாமல் பாடசாலை மாணவர்களும் பங்கு பற்றினர்.

இதேவேளை கண்டி மாவட்ட செயலாளர் கோட்டாபய ஜயரட்ன அக்குறணை, குண்டசாலை, நாவலப்பிட்டி, கங்கவட்ட கோரல ஆகிய நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் டெங்கு நோய் அச்சுறுத்தல் தீவிரமடைந்துள்ளது.

அதனால் இம் மாவட்டத்திலுள்ள இருபது பிரதேச செயலகங்களிலும் இருந்து டெங்கு ஒழிப்பு மத்திய நிலையங்களை அமைக்கவும், அதன் செயற்பாடுகளை துரித கெதியில் முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளேன். இந்த டெங்கு ஒழிப்பு மத்திய நிலையங்கள் மூலம் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் டெங்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் சேகரிக்கவும் மற்றும் டெங்கு பரவும் இடங்களை அடையாளம் கண்டு உடனுக்குடன் இல்லாதொழிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக