3 ஆகஸ்ட், 2010

மட்டு.நகரில் காணிகளை இழந்தோர் மக்கள் நியாய சபையில் முறைப்பாடு

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் காணிகளை இழந்தோர் மக்கள் நியாய சபையில் முறைப்பாடு செய்து ஆவனங்களை சமர்ப்பித்து சாட்சியமளித்து வருகின்றனர். பிரஜா அபிலாஸை எனும் அமைப்பு ஏற்படுத்தயுள்ள பொதுசன நியாய சபையின் முலம் மக்களின் காணிப்பிரச்சினைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவைகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

பிரஜா அபிலாஸை அமைபின் இணைப்பாளர் சுகலா குமாரி தலைமையில் மட்டக்களப்பு ஹோப் இன் ஹோட்டலில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இதன் விசாரணை இடம்பெற்றது.

கடந்த கால போர்ச்சூழலினால் காணிகளை இழந்து திருப்பி பெற்றக்கொள்ள முடியாதர்களினால் விண்ணப்பிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இதன் போது விசாரணை இடம்பெற்றது.

இவ்வமைப்பினால் நியமிக்கப்பட்ட குழுவின் முண்னிலையில் இவர்கள் தமது ஆவணங்களை சமர்ப்பித்து சாட்சியமளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக