16 ஆகஸ்ட், 2010

லியில் கைதான எம்.பிக்கள் இன்று பிணையில் விடுதலை

காலியில் கடந்த 12 ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஜனநாயக தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜித ஹேரத், அஜித் குமார, மாகாண சபை உறுப்பினர் நளின் ஹேவகே ஆகியோர் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிக்குமாறு கோரி, அன்றைய தினம் காலியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது இவர்கள் மூவர் உட்பட 10 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது, இவர்களை 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக