16 ஆகஸ்ட், 2010

கனடாவுக்கு கப்பலில் சென்ற 490 ஈழ தமிழர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கக் கூடாது: இலங்கை அரசு எதிர்ப்பு





“சன் சீ” என்ற கப்பலில் நீண்டதூரம் பயணம் செய்து அவர்கள் கனடாவை அடைந்தனர். அதில் 350 ஆண்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள் இருந்தனர்.

அவர்களை கனடா அரசு அகதிகளாக ஏற்று உரிய உதவிகள் செய்ய ஏற்பாடு செய்து வருகிறது. ஆனால் அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது என்று இலங்கை எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

கனடாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரி சித்திராவ்கனி கனடா அரசுக்கு இது சம்பந்த மாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கனடா வந்துள்ள கப்பலில் தலைவராக செயல்பட்ட வினோத் விடுதலைப் புலிகளின்ருச்சி தலைவர் ஆவார். ஆயுதகடத்தலிலும் அவருக்கு தொடர்பு உண்டு. இதில் வந்துள்ளவர்களில் பலர் விடுதலைப்புலிகள்.

எனவே இவர்களுக்கு கனடா அரசு அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆனால் இதை கனடா அரசு மறுத்துள்ளது. இது குறித்து கனடா எல்லை பாது காப்பு அதிகாரி கூறும்போது, கப்பலில் வந்துள்ளவர்கள் அனைவரும் அப்பாவி களாக தென்படுகிறார்கள். அவர்கள் அகதிகள்தான் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக