26 ஆகஸ்ட், 2010

ஹோட்டலில் காசு கொடுக்காமல் ஏமாற்றிய அவுஸ்திரேலியர் கைது

தம்புள்ளை கண்டலம சுற்றுலா ஹோட்டலில் தங்கியிருந்துவிட்டு 7 இலட்சத்து 74 ஆயிரம் ரூபாவுக்கான ஹோட்டல் கட்டணத்தை செலுத்தாமல் சென்ற அவுஸ்திரேலியர் ஒருவர் காலியில் சுற்றுலா ஹோட்டலொன்றில் தங்கியிருந்த போது, தம்புள்ளை உதவி பொலிஸ் அதிகாரி அலுவலகத்தின் அதிகாரிகள் குழுவொன்றி னால் நேற்று முன்தினம் (24) கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணி அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கண்டலம ஹோட்டலில் தங்கியிருந்தபோது ஹோட்டல் கட்டணத்தை செலுத்தாமல் சென்றிருந்தார்.

அவர் அவுஸ்திரேலியாவுக்கு சென்று மீண்டும் ஒரு முறை சுற்றுலாப் பயணத்துக்காக இலங்கைக்கு வந்திருக்கலாம் என்று பொலிஸார் கூறுகின்றனர். இது தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக