26 ஆகஸ்ட், 2010

சீனாவில் விமான விபத்து: 43 பேர் பலி


சீனாவில் செவ்வாய்க்கிழமை இரவு பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 43 பேர் உயிரிழந்தனர். 48 பேர் காயமடைந்தனர்.
÷இந்த விபத்து ஹெய்லோங்ஜியாங் மாகாணம் இசுங் நகரில் உள்ள லிண்டு விமான நிலையத்தில் நடந்தது.
÷ஹர்பின் நகரிலிருந்து புறப்பட்ட இந்த விமானம், இசுங் நகரில் உள்ள லிண்டு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது பனிமூட்டம் காரணமாக ஓடுபாதையிலிருந்து விலகி விபத்துக்குள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து நேரிட்ட போது விமானத்தில் 91 பயணிகள் இருந்தனர்.
÷விபத்துக்குள்ளான விமானம் ஹேனான் விமான நிறுவனத்துக்குச் சொந்தமானது. இந்த விமான நிறுவனம் சீனாவின் உள்நாட்டு சேவையில் ஈடுபட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக