4 ஜூலை, 2010

பட்ஜட் சபையில் நிறைவேற்றம் வாக்கெடுப்பின்போது ஐ.தே.க கூச்சல், குழப்பம்;


சபையில் போத்தல் வீச்சு; சூடான வாக்குவாதம்


2010ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு நேற்று பாராளுமன்றத்தில் 68 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

நேற்றுக் காலை 9.00 மணிக்கு ஆரம்ப மான இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதம் மாலை 5.55 மணிக்கு நிறைவடைந்ததையடுத்து பெயர் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இவ்வாக்கெடுப்பின் போது 138 வாக்கு கள் ஆதரவாகவும் 75 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. வாக்களிப்பில் 11 பேர் சமுகமளித்திருக்கவில்லை.

ஐ.தே.க., ஐ.தே.கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன வரவு - செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்தன. வாக்களிப்பில் கலந்துகொண்ட ஐ. தே. க.வின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் காதர் ஆதரவாக வாக் களித்தார். நேற்றைய விவாதத்தின் பின் னர் வாக்கெடுப்புக்கு விடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. இரா. சம்பந்தன் விடுத்தார். பெயர் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென அவர் கோரியதற்கிணங்க வாக்கெடுப்பு பெயர் குறித்து நடத்தப்பட்டது.

2010ம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் கடந்த 29ம் திகதி பதில் நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகமவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நான்கு நாட்கள் தொடர்ச்சியாக விவாதம் நடத்தப்பட்டதன் பின்னர் நேற்று வாக் கெடுப்பு நடத்தப்பட்டது. இறுதிநாள் விவாதம் நேற்று மாலை நிறைவு பெற்ற துடன், விவாதத்தை முடித்து வைத்து சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வா பதிலுரையாற்றினார். அதனையடுத்து வாக்கெடுப்பு நடைபெற்றது.

வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பை உறுப்பினர்களின் பெயர் கூறி மேற்கொள்ளப்பட்ட போது, ஐ. தே. க. உறுப்பினர்கள் அதற்கு இடையூறு ஏற்படுத்தியதால் சபையில் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. குழப்பம் விளைவித்தவர்களுக்கு எதிராக நாளை நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உறுப்பினர்களின் பெயர்களைக் கூறி ஆளுந்தரப்பினர் வரிசையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதன் பின்னர் எதிரணிப் பக்கம் உள்ள உறுப்பினர்களின் பெயர்களை அழைத்த போது, ஐ. தே. க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று வரவு - செலவுத் திட்டத்திற்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். இதனால் வாக்கெடுப்பை நடத்துவதில் பெரும் நெருக்கடியான ஒரு நிலை உருவானது.

ஐ. தே. க. உறுப்பினர்கள் ரவி கருணாநாயக்க, ஜோன் அமரதுங்க ஆகியோரின் ஆசனங்களுக்கு நடுவே பா.உ. ஏ. ஆர். எம். அப்துல் காதர் அமர்ந்தபடியே காணப்பட்டார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு மற்றும் எதிரணியில் அமர்ந்திருக்கும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் எவரும் எழுந்து நிற்கவில்லை.

ஐ. தே. க.வினர் கோஷங்களை எழுப்பியதால், பதிலுக்கு ஆளுந்தரப் பினரும் கோஷம் எழுப்பினர். இந்தச் சர்ச்சைக்கும் மத்தியில் உறுப் பினர்களின் பெயர்களைக் கூறி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐ. தே. க.வினரின் கூச்சலுக்கு சகித்துக் கொண்டிருந்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, அமைதியைப் பேணா விட்டால் உறுப்பினர்களின் பெயர் கூறி வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்தார். எனினும், கூச்சல் தணியவில்லை. அவ்வேளையில் ஆளுந்தரப்பிலி ருந்து எதிரணி வரிசையை நோக்கி தண்ணீர்ப் போத்தலொன்று எறியப் பட்டது. அது பா.உ. ஜோன் அமரதுங்கவின் மீது விழுந்தது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் புத்தகமொன்று நனைந்துவிட்டது. வாக்கெடுப்பின் போது அவர் அதனைக் கைக்குட் டையால் துடைத்தபடியே காணப் பட்டார்.

இந்தக் கூச்சலும் குழப்பமும் பெயர் கூறி வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை தொடர்ந்தது. முடிவு அறிவிக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக