4 ஜூலை, 2010

திவுலுவௌவில் புதிதாக பாடசாலை நிர்மாணம்


யுத்தத்தின் பின்னர் மீள்குடியேற்றப்பட்டவர்களின் நலன்கருதி இலங்கை விமானப் படையின் நிதியுதவியின் கீழ் திவுலுவௌவில் புதிதாக அமைக்கப்பட்ட பாடசாலையொன்றை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜகபக்ஷ நேற்று திறந்துவைத்தார்.

மொரவௌ திவுலுவௌவில் 1985 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தற்போது மீண்டும் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த குடும்பங்களிலுள்ள மாணவர்களின் நலன் கருதியே இப்பாடசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அங்கு உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்,“நாட்டில் கல்வியின் தரத்தை அதிகரிக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உண்டு. எந்த பேதங்களும் இன்றி அதனை செய்ய வேண்டும் என்பதில் நாம் அக்கறையுடன் செயற்படுகிறோம்.

இந்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சமுதாயத்தில் மிகச் சிறந்த வகையில் முன்னேறி சொந்த கிராமத்துக்கும் நாட்டுக்கும் சேவையாற்ற வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக