24 ஜூலை, 2010

பலஸ்தீன விவகாரம்: தூதுவர் டொனால்ட் பெரேரா விளக்கம்; மறுப்பு


இஸ்ரேலிலுள்ள இலங்கையின் தூதுவர் டொனால்ட் பெரேரா பலஸ்தீனம் தொடர்பாகக் கூறியதாக வெளிவந்த செய்திகளை அவர் முற்றாக மறுத்துள்ளார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனத்திற்கு அவர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

இலங்கை இஸ்ரேலுடன் நட்புடன் செயற்படுகிறது. இரு நாடுகளுக்குமிடையில் இரு தரப்பு உறவு தொடர்கிறது. அதேநேரம் பலஸ்தீன விவகாரத்தில் அணிசேரா நாடுகளின் கொள்கையை அரசு தொடர்ந்து முன்னெடுக்கிறது.

இஸ்ரேலும் பலஸ்தீனமும் சேர்ந்து பேசுவதன் மூலமே மத்திய கிழக்கில் சமாதானத்தை ஏற்படுத்த முடியும். இதுவே இலங்கையின் நிலைப்பாடு.

ஆகவே நான் கூறியதாக வெளிவந்த செய்தி முற்றிலும் தவறானதாகும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக