24 ஜூலை, 2010

நீரிழிவு, மாரடைப்பு, இரத்த அழுத்தம்... தொற்றாத நோய்களினால் தினமும் 225 பேர் மரணம்


தொற்றாத நோய்களினால் இலங்கையில் தினமும் 225 பேர் மரணமடைவதாகவும் இதனை கட்டுப்படுத்துவதற்காக தேசிய கொள்கையொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு கூறியது. இலங்கையின் சுகாதார குறிகாட்டி கடந்த சில வருடங்க ளில் முன்னேற்றம் கண்டு வருகிறது. ஆண்களின் ஆயுட் காலம் 70 வருடங்களா கவும் பெண்களின் ஆயுட் காலம் 76 ஆகவும் உள்ளது. ஆனால் இத்த கைய தொற்றா, நோய்களினால் ஆயுள் எதிர்பார்ப்பு அதிகரிக்கும் வாய்ப்பு இல்லை எனவும் அமைச்சு கூறியது.

இலங்கையில் தினமும் இடம்பெறும் நோய்களில் 70 வீதமானவை மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் பக்கவாத நோய் என்பவற்றினா லேயே ஏற்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக