24 ஜூலை, 2010

130 இலங்கை குழந்தைகளுக்கு பிரஜாவுரிமைச் சான்றிதழ்



யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவில் தஞ்சமடைந்திருந்த காலத்துள் பிறந்த குழந்தைகளுக்கு பிரஜாவுரிமை வழங்கும் நிகழ்வு கடந்த 22 ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றது.

130 குழந்தைகளுக்கு பிரஜாவுரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் கீழுள்ள நீதிக்கும் சமத்துவத்துக்குமான அமைப்பும் இணைந்து வவுனியாவில் நடத்திய நடமாடும் சேவையின் போதே பிரஜாவுரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக