3 ஜூன், 2010

மக்களுக்கு துரித சேவை வழங்கும் வகையில் அரச சேவையை மறுசீரமைக்க தீர்மானம்

தேசிய மறுசீரமைப்பு சபையின் முதலாவது கூட்டத்தில் உரை
பொது மக்களுக்கு மிகவும் இலகுவானதும், துரிதமானதுமான சேவைகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் அரச சேவையை மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த மறுசீரமைப்பு தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை விரிவாக ஆராய்ந்து துரிதப்படுத்துமாறு அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் ரத்னசிறி விக்ரமநாயக்க தேசிய நிர்வாக மறுசீரமைப்பு சபைக்கு நேற்று (02) ஆலோசனை வழங்கினார். மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கில் கூறப்பட்டுள்ள விடயங்களை முழுமைப்படுத்தும் வகையில் இந்த அரச சேவையை பயனுள்ள வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின்பேரில் நியமிக்கப்பட்ட தேசிய நிர்வாக மறுசீரமைப்பு சபையின் முதலாவது கூட்டம் அமைச்சர் ரத்னசிறி விக்ரமநாயக்க தலைமையில் கூடியது.

இதில், ஆரம்ப உரை நிகழ்த்தும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சக்திமிக்க அரச சேவை ஒன்றை உருவாக்குவதே இந்த மறுசீரமைப்பின் பிரதான நோக்கமாகும்.

அரச துறையின் துரித மேம்பாட்டுக்கு தொழில் நுட்பத்தின் பயன்பாடுகள் மிகவும் முக்கியமானதொன்றாகும். தொழில் நுட்பத்தை ஒதுக்கிவிட்டு இந்த பயணத்தை மேற்கொள்ள முடியாது என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக