
சீனாவில் ஹணூனான் மாநிலத்தில் யாங்ஷவ் என்ற நகரில் உள்ள நீதிமன்றத்துக்குள் கையில் 3 துப்பாக்கிகளுடன் வந்த ஒரு நபர், அங்கு வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த 3 நீதிபதிகளை சுட்டுக் கொன்றார்.
துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். பின்னர் அந்த நபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த நபரின் பெயர் சூ ஜுன் (வயது 46) என்றும் வங்கி ஒன்றில் பாதுகாவலராக வேலை பார்த்து வந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது.
சூ ஜுன்னின் விவாகரத்து வழக்கு அந்த நீதிமன்றத்தில் நடந்தது. அந்த வழக்கில் அவருக் கும் அவரது மனைவிக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது. விவாகரத்து தீர்ப் பில் சொத்து பங்கீட்டில் தனக்கு பாதகம் ஏற்பட்டுவிட்டதாக கருதி சூ ஜுன் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக