3 ஜூன், 2010

புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை ஒழிப்போம் : கெஹலிய சவால்

இலங்கையில் போர் நிறைவடைந்துள்ள போதிலும் விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியில் இயங்கி வருவதாகவும் அந்த வலைப்பின்னலை விரைவில் இல்லாதொழிப்பதாகவும் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

"இலங்கையில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை முற்றாக இல்லாமல் செய்தோம். ஆனாலும் சர்வதேச ரீதியில் அவர்கள், கூட்டிணைப்பை ஏற்படுத்தி எமக்குக் களங்கம் விளைவிக்க முயற்சிக்கிறார்கள்.

சர்வதேச ரீதியிலும் சிலர் அதற்குத் துணை போகிறார்கள். இதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கைள் நல்ல உதாரணங்கள்" என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக