3 ஜூன், 2010

இந்தியா, அமெரிக்கா இடையிலான பல்வேறு உறவுகள் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை

இந்தியா, அமெரிக்கா இடையிலான பல்வேறு உறவுகள் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை முதல் முறையாக இன்று துவங்குகிறது. இதில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் நிலவும் சூழல், பயங்கரவாதத் தடுப்புக்கான ஒத்துழைப்பு ஆகியவை முக்கிய இடம் வகிக்கும். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவுகள் குறித்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, நேற்று முன்தினம் வாஷிங்டன் வந்தடைந்தார். அங்கு, இருதரப்பு உயர்மட்டப் பிரதிநிதிகளுக்கு இடையில் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடக்க உள்ளன. இதில், மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபல், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் பிருத்விராஜ் சவுகான், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், உள்நாட்டுப் பாதுகாப்புக்கான சிறப்புச் செயலர் யு.கே.பன்சால், சுற்றுச்சூழல் செயலர் விஜய் சர்மா மற்றும் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்தப் பேச்சுவார்த்தையில் அமைச்சர் கிருஷ்ணா மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். வெளியுறவுக் கொள்கைகள் குறித்து நிருபமா ராவ், அமெரிக்க அரசியல் விவகார இணையமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் இருவரும் ஆலோசிக்க உள்ளனர். இந்திய - அமெரிக்க விவசாயம் குறித்து, யு.எஸ்.ஏ.ஐ.டி., அதிகாரி ராஜ் ஷா மற்றும் அமெரிக்க மேலாண்மை இணையமைச்சர் ராபர்ட் டி.ஹார்மட்ஸ் இருவரும் பேசுகின்றனர். இதுகுறித்து அமெரிக்க அரசியல் விவகார இணையமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் கூறுகையில்,"இந்தப் பேச்சுவார்த்தைகள், இந்தியாவை உலகளாவிய அளவில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக