2 ஜூன், 2010

புத்தளம் பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் இளஞர்கள் தொடர்ந்து தடுப்புக் காவலில்

புத்தளம் பிரதேசத்தில் நேற்றிரவு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழ் இளஞர்கள் நீதிமன்றப் பணிப்பின் கீழ் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வங்கிக் கொள்ளையில் ஈடுபட முற்பட்டார்கள் என்ற சந்தேசகத்தில் புத்தளம் பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தபட்டனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரும் நரக்கலி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை புத்தளம் வந்த தாம் இருவரும் போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையிலேயே வங்கிக்கு அருகாமையில் நின்றதாக வாக்குமூலம் அளித்திருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக