22 ஜூன், 2010

யாழ். நூலகம் தீக்கிரையாக்கப்பட்டமைக்கு மனம் வருந்திய அமைச்சர் சம்பிக்கரணவக்க

யாழ். பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டமை என்றுமே மனவருத்தத்துக்குரியது என்று மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். யாழ். குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டு நேற்று வருகை தந்திருந்த அவர் யாழ். பொது நூலகத்திற்கும் விஜயம் செய்திருந்தார். யாழ். பொது நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்பு செய்தபின்னர் உரையாற்றுகையிலேயே தனது கவலையை இவ்வாறு அவர் பகிர்ந்து கொண்டார்.

ஆசியாவிலேயே முதன்மை வாய்ந்த இந்த நூலகம் தீக்கிரையாக்கப்பட்டமை ஒருபோதும் எவராலும் ஏற்றுக் கொள்ளமுடியாதது ஆகும். இச் செயலை எவர் செய்திருந்தாலும் அதனை நியாயப்படுத்தவும் முடியாது.

தெற்கைச் சேர்ந்த இலங்கையன் என்ற வகையில் எனது இதயபூர்வமான மனவருத்தத்தை இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அவருடன் ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒமல்பே சோபித தேரர் மற்றும் மஹரகம மஹிந்த தேரர் ஆகியோரும் விஜயம் செய்திருந்தனர். இவர்களை யாழ் . அரச அதிபர் க. கணேஷ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம். சந்திரகுமார் ஆகியோர் வரவேற்றனர். யாழ். குடாநாட்டில் மின்சார விநியோகத்தினை மேம்படுத்துவது தொடர்பாகவும் குடாநாட்டுக்கான லக்ஷபான மின்விநியோக மார்க்கங்களை கட்டியெழுப்புவது தொடர்பாகவும் அமைச்சர் மின்சார சபை அதிகாரிகளுடன் ஆய்வுகளை மேற்கொண்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக