13 ஜூன், 2010

கம்பளை – நுவரெலியா பிரதான பாதையின் தவலந்தனை பகுதியில் மண்சரிவு அபாயம்

கம்பளை – நுவரெலியா பிரதான பாதையின் தவலந்தென்ன நகரிலிருந்து றம்பொடை இடையிலான வாகனப்போக்குவரத்துக்களுக்கு இன்று மாலை 6 மணிமுதல் நாளை காலை 8 மணிவரை தடைவித்திக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் டி.பி.ஜி.குமாரஸ்ரீ அறிவித்துள்ளார்.

றம்பொடை கெரன்டிஹெல நீர் வீழ்ச்சிக்கு அருகில் பாரிய மண்சரிவு அபாயமொன்று ஏற்பட்டுள்ளதாலேயே இவ்வாறு வாகனப்போக்குவரத்துகளுக்குத் தடை வித்திக்கப்பட்டுள்ளது.

கம்பளையிலிருந்து நுவரெலியாவுக்குச்செல்லூகின்ற வாகனங்கள் அனைத்தும் தற்போது தவலந்தென்ன சந்தியிலிருந்து நவநகர பாதை ஊடாக பூண்டு லோயா டன்சினன் வழியாகவும் தலவாக்கலை வழியாகவும் இடம் பெறுகின்றமைக்குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக