13 ஜூன், 2010

வவுனியாவில் 53 முன்னாள் புலிப் போராளி ஜோடிகளுக்கு திருமணம்

முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளில் 53 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான நிகழ்வு இன்று வவுனியா பம்பைமடுவில் இடம்பெற்றது.

யுத்தத்தின் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்த போராளிகளுக்கு புனர்வாழ்வு நிலையங்களில் சுயதொழில் பயிற்சிகளும் புனர்வாழ்வுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்த ஒரு தொகுதியினருக்கு இன்று திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

திருமண பந்தத்தில் இணையும் அனைவருக்கும் வீடுகள் கட்டிக்கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிகழ்வில் இந்திய நடிகர் விவேக் ஒப்ராய், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ,கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியூதின் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக