7 மே, 2010

இலங்கை மீது எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை ஐரோப்பிய யூனியன்




ஜீ. எஸ். பி. வரிச் சலுகைக்காக இலங்கை மீது ஐரோப்பிய யூனியன் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லையென ஐரோப்பிய யூனியன் வதிவிடப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நீதித்துறையை ஐரோப்பிய யூனியன் மதித்துச் செயற்படுகிறது. ஆகையால் இப்போது நடந்துகொண்டிருக் கும் வழக்குகள் தொடர்பில் கருத்துக் கூறும் நிலையில் ஐரோப்பிய யூனியன் இல்லையெனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை உயர் மட்டக் குழு இந்த மாத இறுதியில் பிரசல்ஸ் வரவுள்ளதெனவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக