3 மே, 2010

புலிகளை வென்ற நாள்: இலங்கையில் அணிவகுப்பு






'விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ம் தேதி, ராணுவத்தினர் பங்கேற்கும் சிறப்பு அணிவகுப்பு நடத்தப்படும்'என, இலங்கை அரசு தெரிவித்துள்ளது.இலங்கை ராணுவ செயலர் கோத்தபயா ராஜபக்ஷே கூறியதாவது:கடந்தாண்டு நடந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரில் ராணுவம் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும், மே மாதம் 18ம் தேதி, ராணுவத்தின் சிறப்பு அணிவகுப்பு நடத்தப்படும். இருந்தாலும். இந்தாண்டு மட்டும் வரும் 20ம் தேதி இந்த அணிவகுப்பு நடக்கும்.இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் இந்த வெற்றி அணிவகுப்பில் பங்கேற்க வேண்டும். விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கித் தவித்து வந்த தமிழ் மக்கள், தற்போது சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர். அவர்களும் இந்த வெற்றி அணிவகுப்பில் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு கோத்தபயா ராஜபக்ஷே கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக