3 மே, 2010

நியூயார்க் சதுக்கத்தில் கார் குண்டு வைத்ததாக தலிபான்கள் பொறுப்பு ஏற்பு

அமெரிக்காவில் நியூயார்க் நகரின் மையத்தில் டைம்ஸ் சதுக்கம் உள்ளது. சுற்றுலா தலமான அங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவர். இப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து புகை வந்தது.

இதை பார்த்த நடைபாதை வியாபாரி உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதை தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது காரில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் அதை செயல் இழக்க செய்தனர்.

இக்குண்டு வெடித்திருந்தால் மிகப்பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்பட்டி ருக்கும். இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் இதற்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

இந்த நிலையில் பாகிஸ்தானில் இயங்கும் தெக்ரிக்- இ-தலிபான் அமைப்பின் தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர். யூ டியூப் என்ற இண்டர் நெட்டில் வீடியோ மூலம் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதில் ழுநியூயார்க்கில் டைம்ஸ் சதுக்கத்தில் கார் குண்டு தாக்குதல் நடத்த முயற்சி செய்தது நாங்கள்தான். ஏனெனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈராக்கில் அல்கொய்தா இயக்கத்தின் உயர் தலைவர்கள் அபு ஒமர் அல்-பக்தாதி மற்றும் அபு அயூட் அல்-மஸ்ரி ஆகியோர் அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் அமெரிக்கா ஆளில்லா விமா னங்கள் மூலம் தாக்குதல் நடத்தி தலிபான்களை அழித்து வருகிறது. பாகிஸ்தானை சேர்ந்த நரம்பியல் நிபுணர் டாக்டர் ஆபியா சித்திக் கைது செய்யப்பட்டு நியூயார்க் சிறையில் அடைக் கப்பட்டுள்ளார்.

மேலும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருகிறது. அவற்றுக்கெல்லாம் பழிவாங்கதான் கார் குண்டு வைத்தோம். அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு நாங்கள்தான் பொறுப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வீடியோவில் தெக்ரிக்-இ-தலிபான் அலுவலக ஒருங்கிணைப்பாளர் குவாரி உசேன் மசூத் என்பவரின் பின்னணி குரல் ஒலிக்கிறது. அதில் ஆங்கிலத்தில் சப்-டைட்டிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இதை ஏற்க அமெரிக்கா மறுத்துள்ளது. இச்சம்பவத்தை தலிபான்கள் ஏற்பதற்கு தகுந்த எந்த ஆதாரமும் இல்லை என நியூயார்க் நகர போலீஸ் தலைமை அதிகாரி ரேமண்ட் கெல்லி தெரிவித்துள்ளார்.

மேலும் கார் குண்டு வைத்த தீவிரவாதிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.

இதற்கிடையே அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நடத்திய குண்டு வீச்சில் கொல்லப்பட்டதாக கருதப்பட்ட தலிபான் தலைவர் ஹகிமுல்லா மசூத்தின் வீடியோ ஒன்று இண்டர்நெட்டில் வெளியிடப்பட்டது. அதில் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் தலிபான்கள் தாக்குதல் நடத்துவார்கள் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ கடந்த மாதம் 4-ந்தேதி தயாரிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக