3 மே, 2010

திறைச்சேரியில் பணம் இல்லை : திண்டாடுகிறது அரசு

திறைச்சேரியில் பணம் இல்லாமல் அரசாங்கம் திண்டாடுவதாக ஜனநாயக தேசிய முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

அரச நிறுவனங்களை நடத்திச் செல்வதற்குஸ போதியளவு பணம் இல்லை என்பதை பலரும் தமக்குச் சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்த அவர், இந்த விடயம் தொடர்பில் இதுவரை எந்தத் தீர்வுகளும் முன்வைக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தினார்.

வரவு – செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிப்பதற்கு நாம் அழுத்தம் கொடுக்க, இதுவே காரணம். இந்த விடயங்களை ஊடகங்கள் வெளிக்கொண்டு வரவேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக