6 மே, 2010

மட்டக்களப்பில் ஆட்கடத்தல்கள் தொடர்பில் விரிவான விசாரணை



மட்டக்களப்பில் இடம்பெறும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். முழுமையான விசாரணைகளின் பின்னரே உண்மையான அறிக்கைகளை வெளியிடுவதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் கடந்த வாரம் இடம்பெற்ற கடத்தல் சம்பவங்களால் மக்கள் இன்னமும் பயத்தில் இருப்பதாக தெரிவிக்கும் எமது செய்தியாளர், மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்திலும் சாதாரண தரம் கற்கும் மாணவர் ஒருவர் கடத்தப்பட்டு பின்னர் தப்பி வந்தத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரில் தொடரும் கடத்தல் சம்பங்களால் பாடசாலை மற்றும் தனியார் வகுப்புக்களையும் மாணவர்கள் பயத்தினால் புறக்கணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக