6 மே, 2010

ரஷியாவில் நடந்த கொடூரம் : பெண்ணை கொன்று சமைத்து சாப்பிட்ட வாலிபர்கள்



ரஷியாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பர்க் நகரை சேர்ந்த வாலிபர்கள் கிளாவ்ஸ்கி, மோஸ்னோவ். இருவரும் நெருங்கிய நண்பர்கள். குடிபோதையில் இருந்த அவர்கள் 16 வயது பெண்ணை தண்ணீரில் அமுக்கி கொன்றனர். பின்னர் அவர் உடல் தசை பகுதியை தனியாக வெட்டி எடுத்து சென்றனர்.

அதை இருவரும் சமைத்து சாப்பிட்டனர். அந்த பெண்ணுடைய உடமைகளையும் திருடி சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நடந்தது கிளாவ்ஸ்சிக்கு 19 ஆண்டு ஜெயில் தண்டனையும், மோஸ்னோவ்க்கு 18 ஆண்டு தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக